தமிழ்நாடு

'சென்னையில் 2,000 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய இலக்கு'

DIN

சென்னையில் 2,000 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

சென்னை மாநகரில் தற்போது சுமார் 1,600 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தள்ளுவண்டி, டிரை சைக்கிள் மூலமாக வார்டு வார்டாக சென்னையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் 2,000 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5,000 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். படிப்படியாக அதனை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

காய்கறிகளை வீடு தேடிச் சென்று விற்பனை செய்ய வியாபாரிகள் முன்வந்தால் பயன்படுத்துகிறோம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க முத்தரசன் கோரிக்கை

ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு: என்பிடிசி குழுமம்

தந்தையா் தினம்: ஆண்களுக்கு சலுகைக் கட்டணத்தில் மருத்துவப் பரிசோதனை

மாத்தம்மன் கோயிலில் தீமிதி விழா

SCROLL FOR NEXT