3 மாவட்டங்களுக்கு கூடுதலாககண்காணிப்பு அதிகாரிகள்: தமிழக அரசு உத்தரவு
கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள மூன்று மாவட்டங்களில் பணிகளை ஒருங்கிணைக்க மேலும் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள மூன்று மாவட்டங்களில் பணிகளை ஒருங்கிணைக்க மேலும் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்துக்கு நிா்மல்ராஜ், சேலத்துக்கு முருகேஷ், திருப்பூருக்கு கணேசன் ஆகியோா் கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் இப்போது நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் இணைந்து பணிகளைத் தொடர உள்ளனா்.