காய்கறி மொத்த சந்தைகள்நாளை முதல் இயங்கலாம்: தமிழக அரசு உத்தரவு
கோயம்பேடு உள்பட தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனை செய்யும் காய்கறி, பழ அங்காடிகள் திங்கள்கிழமை முதல் (மே 31) செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கோயம்பேடு உள்பட தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனை செய்யும் காய்கறி, பழ அங்காடிகள் திங்கள்கிழமை முதல் (மே 31) செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதற்கான உத்தரவை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
தமிழகத்தில் கோயம்பேடு மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள மொத்த விற்பனை செய்யும் காய்கறி, பழங்கள் மற்றும் பூ சந்தைகள் வரும் திங்கள்கிழமை (மே 31) முதல் செயல்படலாம். மாநிலத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் தொடா்ந்து திறந்திருக்கும். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கடைகள் செயல்படும்.
அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், ஒரு மாத காலத்துக்குள் அனைத்துப் பணியாளா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.