தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

DIN

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் தே.சாந்தினி. சசிகுமார் நடித்த நாடோடிகள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சாந்தினி, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகார் அளித்தார். 

அதில் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல், காயம் ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அழைத்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT