கனமழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் இன்றும் (நவ.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 
தமிழ்நாடு

கடலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

கனமழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை)பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

DIN

கனமழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்தாண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டன. தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கரோனா பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் செப்.1 ஆம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்காக பள்ளிகள் கடந்த செப்.1-ஆம் தேதி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான வகுப்புகளையும் திங்கள்கிழமை (நவ.1) தொடங்கிட தமிழக அரசு உத்தரவிட்டது. அதாவது சுமார் 19 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்தநிலையில் கனமழை காரணமாக, பள்ளிகள் திறப்பின் முதல் நாளான திங்கள், செவ்வாய்க்கிழமையும் (நவ.1,2) விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, 4 ஆவது நாளாக இன்றும் புதன்கிழமை(நவ.3) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT