தமிழ்நாடு

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

DIN


திருச்சி, புதுக்கோட்டை: தொடர் கனமழை காரணமாக, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்கிறது.

திங்கள்கிழமையின் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்த வண்ணம் இருந்தது.

மழையால் மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா். மாவட்டம் முழுவதும் பரவலாக இடைவிடாது மழை பெய்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளார். 

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று புதன்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT