முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 10,588 போ்

தமிழகத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 10,588 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

தமிழகத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 10,588 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலத்தில் இதுவரை 5.18 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 8,230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 862 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், அதிகபட்சமாக சென்னையில் 122 பேருக்கும், கோவையில் 99 பேருக்கும், செங்கல்பட்டில் 79 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 1,009 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 61,428-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 10,588 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,214-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →