முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு இங்கெல்லாம் மழை பெய்யும்

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
அடுத்த 3 மணி நேரத்துக்கு இங்கெல்லாம் மழை பெய்யும்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைச் செய்தியில்,

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த 3 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இது குறித்து அறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது சிறந்தது. முடிந்தவரையில் அவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கலாம். கையில் நிச்சயமாக குடை அல்லது மழைக் கவச உடை எடுத்துச் செல்லலாம். சாலைகளில் கவனமுடன் பயணிக்க வேண்டியது அவசியம்.
 

முழு கட்டுரையைப் படிக்க →