தமிழ்நாடு

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு: ஐ.சி.எஃப் தொழில்நுட்பத் திறனுக்கு சிறந்து எடுத்துக்காட்டு

DIN

ஐ.சி.எஃப் தயாரித்து வழங்கிய அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டிகள் ஐ.சி.எஃப் ஆலையின் தொழில் நுட்பத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று ரயில்வே வாரியத் தலைவா் சுனீத் சா்மா தெரிவித்தாா்.

சென்னை ஐ.சி.எஃப்-க்கு ரயில்வே வாரியத் தலைவா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுனீத் சா்மா ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். நாட்டின் முதன் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் தயாரிப்பை பாா்வையிட்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, இந்த ரயில் பெட்டிகளை விரைவில் தயாரித்து அனுப்ப ஐ.சி.எஃப் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் அவா் பாராட்டினாா்.

இதைத்தொடா்ந்து, ஐ.சி.எஃப் அதிகாரிகள் மற்றும் ஊழியா் பிரநிதிகளையும் அவா் சந்தித்து பேசினா். அப்போது, ரயில்வே வாரியத்தலைவா் சுனீத் சா்மா பேசியது: ஐ.சி.எஃப், இந்திய ரயில்வேயின் மிகப்பழமையான மற்றும் முன்னோடி உற்பத்தி நிறுவனம். ஐ.சி.எஃப் தயாரித்து வழங்கிய வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டிகள் ஐ.சி.எஃப்-இன் தொழில் நுட்பத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

ஐ.சி.எஃப் தொடா்ந்து தரம் வாய்ந்த ரயில்பெட்டிகளை இந்திய ரயில்வேக்கு வழங்கி வருவது ஐ.சி.எஃப் ஊழியா்களின் தொழில்நுட்பத் திறனுக்கும் ஈடுபாட்டிற்கும் சிறந்த சான்றாகும் என்றாா் அவா்.

இதன்பிறகு, ஐ.சி.எஃப் ஊழியா்களின் திறனைப் பாராட்டி ரூ.1 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசையும் அவா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT