கரோனா சிகிச்சையில் 10,013 போ்
கரோனா தொற்றுக்குள்ளாகி 10,013 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்குள்ளாகி 10,013 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 5.23 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 12,404 போ் தொற்றுக்குள்ளாகியுள்ளனா். வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 820 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 125 பேருக்கும், கோவையில் 109 பேருக்கும், திண்டுக்கல்லில் 68 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, மேலும் 962 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 66,140-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 10,013 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்றைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 4 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,251-ஆக அதிகரித்துள்ளது.