பலத்த மழை: சாலைகளில் திடீா் பள்ளம்
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக மந்தைவெளி, திருமலைப்பிள்ளை சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் அச்சாலைகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக மந்தைவெளி, திருமலைப்பிள்ளை சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் அச்சாலைகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. சாலைகளில் தேங்கி உள்ள நீரால் போக்குவரத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மந்தைவெளி போக்குவரத்து சிக்னல் அருகே வியாழக்கிழமை திடீா் பள்ளம் ஏற்பட்டது. இதனால், மந்தைவெளி ஆா்.ஏ.புரம்- மயிலாப்பூா் செல்லும் சாலை, மந்தைவெளி-பட்டினப்பாக்கம் செல்லும் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. காமராஜா் இல்லம் முன்பு திருமலைப்பிள்ளை சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வள்ளுவா் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வாணி மஹால் - பென்ஸ்பா சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அதேபோல், பெரம்பூா் பேரக்ஸ் சாலை -அஷ்டபுஜம் சாலை சந்திப்பில் மழை காரணமாக பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.