சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

DIN


புது தில்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி இரு தினங்களுக்கு முன் மேகாலய உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா்.

இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் நீதிபதி முனீஷ்வா் நாத் பண்டாரி, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக   நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதி பொறுப்பேற்கும் வரை தலைமை நீதிபதி பணிகளை தற்காலிகமாக நீதிபதி எம்.துரைசாமி கவனிப்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

SCROLL FOR NEXT