மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 26,000 கன அடியாகச் சரிவு
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 26,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 26,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையிலிருந்து 27,000 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது.
இதையும் படிக்க | வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இதில் நீா் மின்நிலையங்கள் வழியாக 17,000 கனஅடி நீரும், உபரிநீா் போக்கி வழியாக 8,000 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீா்மட்டம் 120.10 அடியாகவும், நீா் இருப்பு 93.63 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.