தமிழ்நாடு

ராசிபுரம் அருகே முந்திரி பாரம் ஏற்றிய லாரி கடத்தல்: முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேர் கைது

DIN

ராசிபுரம்: ராசிபுரம் அருகே முந்திரி பாரம் ஏற்றிய லாரியை கடத்தி வந்த முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 கோடி மதிப்பிலான 8 டன் எடை கொண்ட முந்திரி பாரம் ஏற்றிய லாரியை, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திக்கு கடத்திச் சென்ற ஏழு பேர் கொண்ட கும்பலை, நாமக்கல் மாவட்ட போலீசார் உதவியுடன் தூத்துக்குடி மாவட்ட போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த கடத்தலில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஜெபசிங் உள்ளிட்ட 7 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை 7 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். லாரியை பறிமுதல் செய்து தூத்துக்குடி கொண்டு சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT