முகப்பு
தமிழ்நாடு

அதியமான்கோட்டையில் கால பைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
அதியமான்கோட்டையில் கால பைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
பகிர்:

தருமபுரி: தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.

இத் திருக்கோயிலில், காலபைரவர் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், குபேர யாகம் மற்றும் 64 வகையான அபிஷேகம், 28 ஆகம பூஜைகள், 1008 அர்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்திலிருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் பைரவரை வழிபட்டனர். 

இதேபோல, கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள், சாம்பல் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். கரோனா பரவலை தடுப்பு விதிமுறைகளையொட்டி கோயில் பிராகரத்தை வலம் வர பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து மாலையில் காலபரைவர் திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.