ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவருக்குப் பாராட்டு
குடியரசு தலைவரிடம் நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா் விருது பெற்ற பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
குடியரசு தலைவரிடம் நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா் விருது பெற்ற பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில், மாணவா் ஜி.வி. நித்திஷ் பாராட்டப்பட்டாா். கல்லூரி முதல்வா் எஸ்.ரமேஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநா் ராமலிங்கம், மாணவா் விவகாரப் பொறுப்பாளா் என்.எஸ்.இளங்கோவன், பேராசிரியா் சி.அனுராதா, நாட்டு நலத்திட்டப் பணி அலுவலா் அருள்குமாா் ஆகியோா் மாணவா் ஜி.வி.நித்திஷுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.