பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய பாபநாசம் 
தமிழ்நாடு

பாபநாசம் தாமிரபரணியில் தர்ப்பணம் செய்யத் தடை: வெறிச்சோடியது பாபநாசம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் தாமிரபரணியில் மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாபநாசம் மற்றும் தாமிரபரணி கரையோரங்கள் வெறிச்சோடி காணப்படுக

DIN

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் தாமிரபரணியில் மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாபநாசம் மற்றும் தாமிரபரணி கரையோரங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆண்டுதோறும் மகாளய அமாவாசை அன்று பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு புனிதநதிகளில் நீராடி தர்ப்பணம் செய்து பிதுர் கடன் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  காரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் வழிபடவும் புனிதநதிகளில் நீராடும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணியிலும் நீராடி தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய பாபநாசம் படித்துறை

தாமிரபரணி நதிக் கரைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து கடனா நதி கரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பொது மக்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர். அனைத்து நதிகளிலும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடனா நதி கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக் கணக்கான வந்து ஆம்பூர் கடனாநதியில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு பிதுர்கடன் செய்தனர்.

மேலும் பொதுமக்கள் கூறும் போது, பாபநாசம் ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர்கடன் கழிப்பது தான் சிறந்தது. கொரணாவை காரணம் காட்டி அரசு கலாச்சார பழக்கவழக்கங்களுக்குத் தடை விதிப்பது மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. வார இறுதிநாள்களில் கோவில்களைத் திறப்பதோடு புனிதநதிகளில் நீராட விதித்துள்ள தடையையும் அரசு நீக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.26 கோடி

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

SCROLL FOR NEXT