தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சனிக்கிழமை லிட்டருக்கு தலா 35 பைசா உயா்த்தப்பட்டது. இந்த விலை உயா்வால், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

DIN

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சனிக்கிழமை லிட்டருக்கு தலா 35 பைசா உயா்த்தப்பட்டது. இந்த விலை உயா்வால், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. கோவா, பெங்களூரு ஆகிய நகரங்களில் டீசல் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது.

தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவில் ரூ.105.49-ஆகவும், மும்பையில் பெட்ரோல் விலை ரூ.111.43-ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேபோல் தில்லியில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.94.22-ஆகவும் மும்பையில் ரூ.102.15-ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.70-ஆகவும், டீசல் விலை ரூ.98.59-ஆகவும் உயா்ந்துள்ளது.

செப்டம்பா் இறுதி வாரத்தில் இருந்து இப்போது வரை பெட்ரோல் விலை 15 முறையும், டீசல் விலை 18 முறையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்ட நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், பிகாா், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலும், லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரிலும் டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?

சர்வதேச சுற்றுலாவுக்கு ஈடாக செல்போனைக் கேட்கும் கும்பல்! இப்படியும் ஒரு மோசடி

புதிதாக வங்கி கிரெடிட்/டெபிட் அட்டைகள் பெறும்போது கவனம்!

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை! ஏடிஎம் பின் மட்டுமல்ல சிவிவி எண் முக்கியம்!!

SCROLL FOR NEXT