முகப்பு
தமிழ்நாடு

சிவகாசி, திருத்தங்கலில் அதிமுக பொன்விழா

சிவகாசி மற்றும் திருத்தங்கலில் அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி 21 இடங்களில் கட்சி கொடியை முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி .ராஜேந்திர பாலாஜி ஏற்றிவைத்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

சிவகாசி மற்றும் திருத்தங்கலில் அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி 21 இடங்களில் கட்சி கொடியை முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி .ராஜேந்திர பாலாஜி ஏற்றிவைத்தார்.

திருத்தங்கல், சிவகாசி, விருதுநகர் சாலையில் இரு இடங்களிலும் சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிவகாசியில் பராசக்தி காலனி பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களை கே.டி. ராஜேந்திர பாலாஜி மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றினார்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், திருத்தங்கல் அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல், நகர அவைத்தலைவர் கோயில்பிள்ளை, சிவகாசி அதிமுக நகரச் செயலாளர் அசன் பத்ருதீன், ஒன்றியச் செயலாளர்கள் பலராமன் கருப்பசாமி மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →