தமிழ்நாடு

உழவர் உதவி மையம்: அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்

நேரடி நெல் கொள்முதல் தொடர்பான உழவர் உதவி மையத்தை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று திறந்து வைத்தார்.

DIN

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர் பெருமக்கள் நெல் விற்பனை செய்து பயன்பெறுவதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்ட உழவர் உதவி மையத்தினை 
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று திறந்து வைத்தார். 

இதற்கெனத் தனியாக உருவாக்கப்பட்ட 6 இணைப்புகள் கொண்ட உழவர் உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி சேவையினையும், அவர் தொடங்கி வைத்தார். கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 599 3540 மூலம் தமிழகத்தில் உள்ள உழவர் பெருமக்கள் மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு நெல் விற்பனை செய்வதற்குத் தேவையான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக புகார்கள், ஆலோசனைகள் ஏதுமிருப்பின் அவற்றையும் தெரிவிக்கலாம்.
இந்நிகழ்வில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT