மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை: உயர் நீதிமன்ற நீதிபதி 
தமிழ்நாடு

மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை: உயர் நீதிமன்ற நீதிபதி

மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

DIN


சென்னை: மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவித்த பகுதியில் அனைத்து மதத்தினரின் உடல்களையும் தகனம் செய்வது தொடர்பான மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவித்த பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதியுங்கள்.

உடல்களை தகனம் செய்ய தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.  கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என்று நீதிபதி கூறினார்.

உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் சய்ய அனுமதி வழங்குமாறு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT