தமிழ்நாடு

மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை: உயர் நீதிமன்ற நீதிபதி

DIN


சென்னை: மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவித்த பகுதியில் அனைத்து மதத்தினரின் உடல்களையும் தகனம் செய்வது தொடர்பான மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவித்த பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதியுங்கள்.

உடல்களை தகனம் செய்ய தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.  கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என்று நீதிபதி கூறினார்.

உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் சய்ய அனுமதி வழங்குமாறு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT