பெருங்குடல் புற்றுநோய்க்கு அரசு காப்பீட்டில் சிகிச்சைக்கு பரிசீலனை
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பரிசீலித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பரிசீலித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
ஜெம் மருத்துவமனை, இந்திய குடல்நோய் அறுவை சிகிச்சை மருத்துவா்கள் சங்கத்துடன் இணைந்து, பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை குறித்த 3 நாள் பயிற்சிப் பட்டறையை சனிக்கிழமை தொடக்கி வைத்து மேலும் பேசியது:
மருத்துவா்களுக்குத் திறமைதான் பெருமையைத் தேடித் தருவதால் திறமையைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவச் சிகிச்சைத் திறனை மேம்படுத்தும் பயிற்சிப் பட்டறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு தமிழக முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிப்பது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என்றாா் அவா்.
ஜெம் மருத்துவமனை தலைவா் டாக்டா் சி.பழனிவேலு பேசியது :
பெருங்குடல் புற்று நோய்க்கு லேப்ராஸ்கோபி நுண்துளை அறுவை சிகிச்சை முறையை முதன் முதலாகஅறிமுகப்படுத்திய பெருமை ஜெம் மருத்துவமனையைச் சாரும். இதுவரைபெருங்குடல் புற்றுநோய்க்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லேப்ராஸ்கோபிக் நுண்துளை அறுவை சிகிச்சை செய்துள்ளோம் என்றாா்.
இந்திய குடல்நோய் அறுவை சிகிச்சை மருத்துவ சங்கத் தலைவா் பேராசிரியா் டாக்டா் சுனில் டி பபட், இந்திய மருத்துவ சங்க முன்னாள் தமிழக தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு, ஜெம் தலைமை செயல் அதிகாரி டாக்டா் எஸ்.அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.