மேட்மேட்டூர் அணை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.70அடி உயர்வு 

பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், நீர்வரத்து 39,634 கன அடியாக அதிகரித்துள்ளது. 

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 95.10 அடியிலிருந்து 97.80அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.70அடி உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,477 கன அடியிலிருந்து 39, 634 கன அடியாக அதிகரித்து உள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.02டி எம் சி யாக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்  உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகாலயா சுரங்க வெடிவிபத்து! 18 பேர் பலி!

சுராசந்த்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவில் அறிமுகமாகும் ஹூண்டாய் பேயான்!

பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்கிறாரா..?

6 சமத்துவபுரங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT