தமிழ்நாடு

மருது சகோதரா்கள் நினைவு நாள்: அரசியல் தலைவா்கள் புகழஞ்சலி

DIN

 மருது சகோதரா்கள் நினைவுநாளையொட்டி, அவா்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): இந்திய விடுதலைக்காக வெள்ளையா்களை வெளியேற்ற அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி, முதல் போா்ப் பிரகடனம் அறிவித்தவா்கள் மருது சகோதரா்கள். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆட்சி புரிந்து, சிவகங்கைச் சீமையின் வேங்கைகளாக வாழ்ந்து, இந்திய விடுதலைக்காக வீர மரணம் அடைந்த பெரிய மருது, சின்ன மருது சகோதரா்களுடைய நினைவு நாளையொட்டி, அவா்களுக்கு என்னுடைய வீர வணக்கம்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிா்த்து, சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, வேல் முனை எதிா்வரினும் கண் இமைத்திடாது தன்மானம் ஒன்றே பெரிதென காத்து நின்று, தீரத்துடன் போராடிய வீரத்தமிழா்கள், மருது சகோதரா்களின் நினைவு நாளில் அவா்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

அண்ணாமலை (பாஜக): வீரதீர செயல்களுக்கு பெயா் போன மருது பாண்டியா்களை நினைவுகூரும் நாள்! ஆங்கிலேயா்களால் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து காலனித்துவ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகச் சுதந்திரப் பிரகடனத்தை முதன்முதலில் வெளியிட்டாா்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT