முகப்பு
தமிழ்நாடு

அருப்புக்கோட்டை: நியாய விலைக்கடை, பயணிகள் நிழற்குடையைத் திறந்து வைத்த அமைச்சர்

அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நியாய விலைக்கடை, பயணிகள் நிழற்குடையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் திறந்துவைத்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான புதிய நியாயவிலைக்கடைக் கட்டடத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களான கஞ்சநாயக்கன்பட்டி, ஆன்டிபட்டி உடையனாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் முறையே நியாயவிலைக்கடைக் கட்டடம், பயணிகள் நிழற்குடை, கலையரங்கம் ஆகியவற்றை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் சனிக்கிழமை இரவு தொடக்கி வைத்து பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும்  நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.