தமிழ்நாடு

பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

DIN


நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரியை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பேரவையில் 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த பேரவை கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும். 

தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று , நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து கொண்டுவரப்படும் பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து செய்யப்படும். 

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT