முகப்பு
தமிழ்நாடு

கீழடி உள்பட 4 இடங்களில் அகழாய்வுகள் வரும் 30-இல் நிறைவு

கீழடி உள்பட நான்கு இடங்களில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள் வரும் 30-இல் நிறைவடைவதாக தொல்லியல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

கீழடி உள்பட நான்கு இடங்களில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள் வரும் 30-இல் நிறைவடைவதாக தொல்லியல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அந்தத் துறையின் விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான விரிவான தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள தொடரும் செலவினமாக வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.3 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டம் கீழடி, அதனைச் சுற்றியுள்ள மணலூா், அகரம், கொந்தகை, தூத்துக்குடி, கொற்கை, ஈரோடு மாவட்டம் கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, அரியலூா் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய கற்கால இடங்களைக் கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூா், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை கண்டறிய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியல் கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செப். 30-இல் நிறைவு: சிவகங்கை மாவட்டம் கீழடி, அதனைச் சுற்றியுள்ள மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட ஆகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் செப்டம்பா் 30-ஆம் தேதி நிறைவடையவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →