முகப்பு
தமிழ்நாடு

சிவகிரி அருகே கார் பள்ளத்தில் உருண்டதில் 3 பேர் பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் இறந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
சிவகிரி அருகே கார் பள்ளத்தில் உருண்டதில் 3 பேர் பலி
பகிர்:

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் இறந்தனர்.

மதுரை செல்லூரைச் சேர்ந்த அருண்குமார், பிரபு, பேச்சிமுத்து, ஜான்சன், மன்சூர் அலிகான், கப்பலூரை சேர்ந்த சுரேஷ் குமார் ,ராஜேஷ் குமார், வில்லாபுரத்தை சேர்ந்த ஜான்சன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு காரில் குற்றாலத்திற்கு சென்றனர்.

பின்னர் சனிக்கிழமை அதிகாலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 
சிவகிரியை அடுத்த மொட்டை மலை அருகே சென்று கொண்டிருந்தபோது கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், செல்லூரைச் சேர்ந்த நாகராஜ் மகன் பிரபு (24), கப்பலூரைச் சேர்ந்த மங்கலராஜ் மகன் சுரேஷ்குமார் (31) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டிச்சென்ற  முகமது நயினார் மகன் மன்சூரலிகான் (28 )திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த அருண்குமார், பேச்சிமுத்து, ஜான்சன், ராஜேஷ்குமார் ஆகியோர் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக சிவகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →