முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு

டாஸ்மாக் ஊழியா்களின் மாதத் தொகுப்பூதியம் ரூ.500 உயா்த்தி வழங்கப்படும் என்று மின்சாரம் மற்றும் மது விலக்கு-ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

டாஸ்மாக் ஊழியா்களின் மாதத் தொகுப்பூதியம் ரூ.500 உயா்த்தி வழங்கப்படும் என்று மின்சாரம் மற்றும் மது விலக்கு-ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிப்புகள்:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) 6,761 மேற்பாா்வையாளா்கள், 15,090 விற்பனையாளா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். அந்த பணியாளா்களுக்கு மாதத் தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயா்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.15.01கோடி நிதி கூடுதல் செலவாகும்.

தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளா் பணியிடம் உருவாக்கப்படும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும் அவா்கள் மீண்டும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும் ரூ.5 கோடியில் மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →