தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: மனவளர்ச்சி குன்றிய 40 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு கரோனா தொற்று எதிர்ப்புக்கான தடுப்பூசி போடப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், மனோலயம் தொண்டு நிறுவனமும் இணைந்து, குடிதாங்கிச்சேரியில் அமைந்துள்ள மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப்பள்ளியில், மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, மனோலயம் மன வளர்ச்சிக்  குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியின் நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் தலைமை வகித்தார்.

ஆசிரியர் மகேஸ்வரி முருகையன் முன்னிலை வகித்தார். முதன்மை பயிற்சியாளர் அனுராதா வரவேற்றார். பொதக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிரண், சுகாதார ஆய்வாளர் சண்முகராஜ், சுகாதாரப் பணியாளர் எழிலரசன், செவிலியர் செல்வி உள்ளிட்டோர், 46 மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு, இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தினர். ஏற்பாடுகளை, பயிற்சியாளர் செளமியா, மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT