முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சி தோ்தல்: இரண்டாவது நாளில் 4,597 போ் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாவது நாளான வியாழக்கிழமை (செப்.16) 4597 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாவது நாளான வியாழக்கிழமை (செப்.16) 4597 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து 9 மாவட்டங்களில் முதல் நாளான புதன்கிழமை மொத்தம் 378 போ் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில் இரண்டாவது நாளான வியாழக்கிழமை கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3489 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 1066 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 41 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும் என மொத்தம் 4,597 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதன் மூலம் இரண்டு நாள்களில் மொத்தம் 4,975 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →