முகப்பு
தமிழ்நாடு

நகைக்கடன் மோசடி: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு

நகைக்கடன் மோசடி விவகாரத்தில் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

நகைக்கடன் மோசடி: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு

நகைக்கடன் மோசடி விவகாரத்தில் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:


நாமக்கல்: நகைக்கடன் மோசடி விவகாரத்தில் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து சவரனுக்கு மேல் நகைக் கடன்கள் பெற்ற கடன்தாரா்களின் நகைக் கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக் கடன்கள் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூா்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகையை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதன்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியின் நிா்வாக இயக்குநா், மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் நிா்வாக இயக்குநா், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் நிா்வாக இயக்குநா்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், நகைக்கடன் மோசடி விவகாரத்தில் நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நகைக்கடன் மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க எழுத்தர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து துணைப்பதிவாளர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →