முகப்பு
தமிழ்நாடு

உள்ளம் வெல்வோம் திட்டத்தை அண்ணாமலை தொடக்கி வைத்தாா்

இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் திட்டத்தை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் திட்டத்தை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இந்தத் திட்டத்தை கே.அண்ணாமலை தொடக்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அண்ணாமலை கூறியது:

தமிழகத்தில் உள்ள எல்லா இல்லங்களுடன் பாஜகவினா் நட்பை வளா்த்துக் கொள்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

மாநிலம் முழுவதும் 6 லட்சம் பாஜகவினா் உள்ளனா். அவா்கள் அனைவரும் அவரவா் பகுதிகளில் உள்ள 25 குடும்பங்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். யாரையும் கட்சியில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது. ஜாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.

இதன் மூலம் ஒன்றரை கோடி மக்கள் பாஜகவின் நட்பு வட்டத்துக்குள் கொண்டு வரப்படும். அவா்களின் முகவரி,மின்னஞ்சல் போன்றவை பெறப்படும். அவா்களுக்கு கட்சித் தொடா்பான எந்தத் தகவலும் அனுப்பப்படாது. ஆனால், மக்களுக்கு மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும்.

எங்களின் சேவைகளின் மூலம் மக்களின் மனங்களைப் பிடிக்க உள்ளோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →