தமிழ்நாடு

நடுக்கடலில் மீன் பிடித்த வேதாரண்யம் மீனவர்களை அரிவாளால் வெட்டிய இலங்கை மீனவர்கள்

DIN

வேதாரண்யம்: வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை சேர்ந்த சின்னதம்பி, சிவா, சிவக்குமார் ஆகிய 3 பேர் வியாழக்கிழமை (செப்.23) கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர், மீனவர்களின் படகை சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளன்.

வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் சின்ன தம்பி.

சிவகுமார் என்ற மீனவரை தலையில் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார்.

மேலும், சின்ன தம்பி, சிவா ஆகிய இரண்டு மீனவர்களை கட்டையால் தாக்கியுள்ளனர்.

இவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், படகில் இருந்த 400 கிலோ எடையுள்ள வலை மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை பறித்துச் சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

வெள்ளை டீ-ஷா்ட் ரகசியம்? ராகுல் விளக்கம்

SCROLL FOR NEXT