தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ‌. 39.95 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ‌. 39.95 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

உளவுத்துறையின் ரகசியத் தகவலைத்தொடர்ந்து ஃப்ளை துபை எஃப்இசட்-447 விமானத்தில் துபையிலிருந்து சென்னை வந்த 41 வயதான ஆண் பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரை சோதனை செய்தபோது, 940 கிராம் எடையிலான தங்கம் அவரது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ. 39.95 லட்சம் மதிப்பிலான 864 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT