முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் போல என்ற வாக்குக்கு இணங்க, தர்மபுரியில், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு திரும்புகையில், அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்த விடியோவை, முதல்வர் ஸ்டாலின் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அந்த விடியோவுடன், இரவும் பகலும் காவல் காத்து சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்திடும் மகத்தான பணி காவல்துறையினருடையது! அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். வள்ளுவர் வாக்கின்படி முறைசெய்து காப்பாற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
அந்த சுட்டுரை..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் தனது ஆய்வு பணியை முடித்துக்கொண்டு நேற்று இரவு தர்மபுரி மாவட்டத்திற்கு செல்லும் வழியில் திடீரென்று முதலமைச்சரின் வாகனத்தை நிறுத்தச் சொல்லி வழியில் அமைந்துள்ள அதியமான் கோட்டை காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்.
அங்கு பணியிலிருந்த காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் வழக்குகளின் பதிவேடுகள் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாகவும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.