முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி தொகுதியில் முதல்வர் வாக்களித்தார்

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார்
பகிர்:

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

வாக்களிப்பதற்கு முன்பாக தனது இல்லத்தில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தனது இல்லத்திலிருந்து அரசுப் பள்ளியிலிருந்த  வாக்குச்சாவடிக்கு  நடந்து சென்று முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் வாக்களித்தார். உடன் அவரது மகன் மிதுன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள். பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்குபதிவு செய்தனர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர்,  தமிழக வாக்காளர்கள் அனைவரும் தவறாமல்  வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். 

முழு கட்டுரையைப் படிக்க →