முகப்பு
தமிழ்நாடு

காலமானார் முத்துவேலழகன்

திருச்சியைச் சேர்ந்த முதுபெரும் நாடகக் கலைஞரும், கார்முகில் புத்தகக் கடை உரிமையாளருமான முத்துவேலழகன்(86) உடல்நலக்குறைவால் காலமானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
முத்துவேலழகன்
பகிர்:

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த முதுபெரும் நாடகக் கலைஞரும், கார்முகில் புத்தகக் கடை உரிமையாளருமான முத்துவேலழகன்(86) உடல்நலக்குறைவால் காலமானார்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள வசந்த் நகரில் வசித்து வந்த இவர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் கார்முகில் என்ற பெயரில் புத்தகக் கடை நடத்தி வந்தார். ரயில்வேயில் பணிபுரிந்தவர்.

இளம்வயது முதலே நாடகத்தின் மீது கொண்ட பற்றுதலால், நாடகக் கலைஞராக உருவெடுத்தார். 33-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். பிரியமுடன் பிரபு என்ற தமிழ்த் திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். இவரது பதினெட்டாம் போர் என்ற நாடகம் பிரசித்தி பெற்றது.

Advertisement

தமிழ் நாடக உலகில் முன்னோடியாகவும் விளங்கிய இவர் தனது வாழ்நாள் முழுவதும் நாடகக் கலைக்காக செலவிட்டவர். கடந்த சில நாள்களாக உடல் நலன் பாதிக்கப்பட்டவர், வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளனர்.

தொடர்புக்கு 98945-38863.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments