தமிழ்நாடு

அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி: போக்குவரத்துத் துறை

அரசு விரைவுப் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கென தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. 

DIN


அரசு விரைவுப் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கென தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் வெளியூர்களுக்கு செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக தலா 2 படுக்கைகள் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதம், குளிர்சாதனமில்லா அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போதே1எல்பி, 4எல்பி ஆகிய படுக்கைகள் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

பேருந்துகள் புறப்படும் வரை, குறிப்பிட்ட படுக்கைகளுக்கு பெண்கள் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாவிடில் அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

SCROLL FOR NEXT