முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா: சிகிச்சையில் 293 

தமிழகத்தில் இன்று புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
பகிர்:

தமிழகத்தில் இன்று புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 27,899 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மற்றொருபுறம் மேலும் 45 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 14,539-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 293 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கரோனா உயிரிழப்பு இன்று ஏதும் பதிவாகவில்லை. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 38,025 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.