கோப்புப்படம் 
தமிழ்நாடு

நூல் விலை உயர்வு நீடித்தால் ஜவுளித்துறை முடங்கிவிடும்: விஜயகாந்த்

நூல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்றும் இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித்துறை முடங்கி விடும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

DIN

நூல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்றும் இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித்துறை முடங்கி விடும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

பின்னலாடை உற்பத்தில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாகவும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் இருக்கும் திருப்பூரில்தான் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக தயாராகின்றன. 

இந்நிலையில் பின்னலாடைகளின் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ₹.230-க்கு விற்பனையான நூல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ₹.160 வரை உயர்ந்துள்ளது. ஏழை நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் அனைத்து விலைவாசிகளின் உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும் இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த ஜவுளித்துறை முடங்கி விடும். 

இதுதவிர பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, எண்ணெய் என அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அதனை மக்கள் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கனில் ஒரேநாளில் இருமுறை நிலநடுக்கம்!

தாம்பரம் மாநகராட்சியில் சொத்துவரி 100% உயர்வு: டிச.16ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

நீதிபதி G.R.சுவாமிநாதன் பதவி நீக்கத் தீர்மானம்! மக்களவை தலைவரிடம் வழங்கிய INDIA கூட்டணி MPக்கள்!

அழுதாலும், சிரித்தாலும் நட்பே துணை! பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் சந்திப்பு!

காந்தி, படேலை தவிர்த்து நேருவை மட்டும் குறிவைப்பது ஏன்? மோடி, அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி!

SCROLL FOR NEXT