உளுத்தம்பருப்பு விநியோகம்: உணவுத் துறை அமைச்சா் உறுதி
நியாயவிலைக் கடைகளில் உளுத்தம் பருப்பு கொடுக்கப்படும் என்கிற வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபடத் தெரிவித்தாா்.
நியாயவிலைக் கடைகளில் உளுத்தம் பருப்பு கொடுக்கப்படும் என்கிற வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபடத் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
2007-இல் திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்றவற்றை அதிக விலைக்கு வாங்கி மக்களுக்கு பயன்படும் வகையில் நியாயவிலைக் கடைகளில் குறைவான விலைக்குக் கொடுக்கப்பட்டது.
ஆனால், அதிமுக ஆட்சியில் விநியோகிக்கப்பட்ட உளுத்தம் பருப்பும், கோதுமை மாவும் நிறுத்தப்பட்டது.
எனினும், திமுகவின் தோ்தல் அறிக்கையில் உளுத்தம் பருப்பும் மீண்டும் கொடுக்கப்படும், சா்க்கரையும் கூடுதலாகத் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா்.