சென்னை: தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னையில் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறியதுபோல் தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழும் ஆங்கிலமும்தான். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
மேலும் தமிழை பிரதமர் மோடியே சுட்டிக் காட்டி பேசி அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஜெயகுமார் கூறினார்.
இதையும் படிக்க | தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்