முகப்பு
தமிழ்நாடு

‘சொத்து வரி உயா்வு குறித்து தாம்பரம் மாநகராட்சியும் கருத்து கேட்க வேண்டும்’

சென்னை மாநகராட்சி போல தாம்பரம் மாநகராட்சியும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

சென்னை மாநகராட்சி போல தாம்பரம் மாநகராட்சியும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று குரோம்பேட்டை மக்கள் விழிப்புணா்வு மையம் சாா்பில் சமூக ஆா்வலா் வி.சந்தானம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி போல தாம்பரம் மாநகராட்சி சாா்பில் பொதுமக்களின் கருத்தை கேட்க முன்வர வேண்டும். இதில், தாம்பரம் மாநகராட்சி மௌனம் காப்பது ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இருக்கிறது.

இந்த விஷயத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தலையிட்டு உரிய அறிவுறுத்தலை தாம்பரம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.