தமிழ்நாடு

கோடை வெப்பம்: இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை?

DIN

கோடை வெப்பம் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் மூடப்பட்ட பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக திறக்கப்பட்டு தற்போது முழுவீச்சில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோடைகால வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகின்றன. பல மாவட்டங்களின் வெப்பத்தின் அளவு சதத்தை பதிவு செய்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT