எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று விடுமுறை
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, சனிக்கிழமை பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, சனிக்கிழமை பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஏப்.23-ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு (எஸ்எம்சி) நடைபெறவுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேவேளையில், இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அன்றைய தினம் தவறாமல் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.