தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிடுகிறார் மத்திய மண்டல காவல் தலைவர் வி. பாலகிருஷ்ணன் 
தமிழ்நாடு

தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

தஞ்சாவூர் தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

DIN

தஞ்சாவூர் தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

 “தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, களிமேடு கிராமத்தில்‌ இன்று அதிகாலை நடைபெற்ற தேர்‌ திருவிழாவில்‌ எதிர்பாராத விதமாக தேர்‌ மின்கம்பியில்‌ உரசியதால்‌ ஏற்பட்ட விபத்தில்‌ 11 பேர்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்‌ என்ற துயரமான செய்தியினைக்‌ கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்‌. உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

மேலும்‌, இவ்விபத்தில்‌ 15 நபர்கள்‌ தற்போது சிகிச்சையில்‌ உள்ளதாக அறிகிறேன்‌, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும்‌ விபத்து பகுதியில்‌ மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும்‌ மாவட்ட நிர்வாகத்திற்கும்‌, காவல்
துறைக்கும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌.

இந்த விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தாருக்கு தலா ஐந்து இலட்சம்‌ உடனடியாக முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்‌.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 2.78 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை: தென் மாவட்ட விவசாயிகள் சங்கம்

சிறந்த திருநங்கைக்கான விருதுக்கு பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூடத்தில் புனரமைக்கப்பட்ட பணிகள் தொடக்கிவைப்பு

SCROLL FOR NEXT