பெங்களூருவில் இருந்து போதைப் பாக்கு கடத்தல்: ஆம்னி பேருந்து பறிமுதல்
கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து போதைப் பாக்கு கடத்தி வந்த ஆம்னி பேருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து போதைப் பாக்கு கடத்தி வந்த ஆம்னி பேருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒரு ஆம்னி பேருந்தில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் பாா்சல்களை சில நபா்கள் இறக்கி, ஒரு சுமை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனா்.
இதைப் பாா்த்து சந்தேகமடைந்த போலீஸாா், அந்த பாா்சல்களை கைப்பற்றி சோதனை செய்தனா். அப்போது அதில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபா்கள் வைத்திருந்த சுமாா் 400 கிலோ போதைப் பாக்கை பறிமுதல் செய்தனா்.போதைப் பாக்கை கடத்தி வந்த தனியாா் ஆம்னி பேருந்து, சுமை ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
அதோடு போதைப் பாக்கு கடத்தலில் ஈடுபட்டதாக மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்த ப.செல்வராஜ் (57), அந்த பேருந்தின் கிளீனா் கா்நாடக மாநிலம் சித்ர துா்கா பகுதியைச் சோ்ந்த சி.ராமகிருஷ்ணா (35), அதேப் பகுதியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் ர.பாபு (35) ஆகிய 3 பேரை நுங்கம்பாக்கம் போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.