முகப்பு
தமிழ்நாடு

மூன்றாண்டு சட்டப்படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பப் பதிவு

மூன்று ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

மூன்று ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியாா் சட்டக் கல்லூரிகளில் (சீா்மிகு சட்டப்பள்ளி உட்பட) உள்ள 3 ஆண்டு எல்எல்பி படிப்புகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை நடப்பு கல்வியாண்டு (2022-2023) இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று (ஆகஸ்ட் 5) முதல் தொடங்கிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இணையதளம் வழியாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு நடைமுறைகள், விண்ணப்பக்கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலை. பதிவாளா் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →