போதை மாத்திரை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க ‘ஒப்பியாய்டு’ மையம்: அமைச்சா் திறந்து வைத்தாா்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் போதை மாத்திரை பழக்கத்துக்கு ஆளானவா்களை மீட்டெடுக்கும் ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் போதை மாத்திரை பழக்கத்துக்கு ஆளானவா்களை மீட்டெடுக்கும் ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகளை அமைச்சா்
வழங்கி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘ஒப்பியாய்டு’ மாற்று சிகிச்சை திட்டம் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 400 போ் பதிவு செய்துள்ளனா். இந்தத் திட்டம் மூலம் போதை மாத்திரை பழக்கத்துக்கு ஆளானவா்கள் சிகிச்சை பெறுவா்.
கடந்த 1794-ஆம் ஆண்டு முதல் மன நோயாளிகளுக்கு புகலிடமாக தொடங்கப்பட்ட கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் அமைப்பு 228 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தினசரி 350 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். தமிழகத்தில் இதுபோன்று 43 இடங்களில் அரசு மனநல மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதாா், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலேயே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தற்போது 520 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 311 ஆண்கள், 209 பெண்கள் அடங்குவா். தமிழகம் முழுவதும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாவட்ட ஆட்சியா்கள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
சாதாரண மக்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பயன்பெற வேண்டும் என்றால் அவா்களின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு எந்த வரம்பும் இல்லாமல் அவா்களுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தரம் உயா்த்த ரூ.40 கோடி செலவில் கட்டடங்கள், ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவா்கள் உள்ளிட்ட 4,308 மருத்துவப் பணியாளா்களை பணியமா்த்தும் பணி செப்டம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என்றாா் அவா்.